கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தேங்காய் வியாபாரியான விஷால் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த அன்வர் சதாத் என்பவர் கிருஷ்ணனிடம் 17,000 கிலோ தேங்காய் வாங்கியுள்ளார். அதற்கு முதற்கட்டமாக 3 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

மீதமுள்ள 11 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் அன்வர் சரியான பதில் கூறவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அன்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.