சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவிகள் கிடைத்துள்ளது. அந்த பணம் நாட்டில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்றவர்களில் 90 பேரை அனுப்பி வைத்துள்ளது. அதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். மேலும் ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதை நிராகரித்து விட்டதாக அர்த்தம் என்று கூறியுள்ளார்.