”களம் நமதே” முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர்,  உதயநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்று வளர்ந்து பிள்ளையை பார்த்து சில பெற்றோர் நினைப்பதுண்டு. விளையாட்டு துறைக்கு அமைச்சராக நம்ம பிள்ளை சிறப்பாக செயல்படுகிறார் என்று பெற்றவனை மகிழ்விக்க கூடியவர்களாக உதயநிதி இருக்கிறார்.

விளையாட்டை பார்ப்பவர்களுக்கு கலிப்பாக இருக்கும். விளையாட்டை போல் விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்களும் அந்த போட்டிகளில் விளையாடுபவர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும். இந்த நிகழ்வை மிக பொறுப்பாக நடத்தி இருக்கின்ற விளையாட்டு துறையின் உடைய செயலாளர் அவர்களுக்கும்,  உறுப்பினர் – செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நேரு விளையாட்டு உள் விளையாட்டு அரங்கை பார்க்கின்ற நேரத்தில் என் நினைவுகள் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு செல்கிறது. இதே நேரு உன் விளையாட்டு அரங்கில் தான் கடந்த ஆண்டு அதன் தொடக்க நிகழ்ச்சியும்,  நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நீங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

மற்ற விளையாட்டு போட்டிகளின் போது நடத்தப்படக்கூடிய கலை நிகழ்ச்சிகள் போல் இல்லாமல் நமது தமிழ்நாட்டின் – இந்திய நாட்டினுடைய வரலாற்றை நமது மண்ணுக்கு விருந்தினராக வந்த வெளிநாட்டு வீரர்களுக்கு கலை நிகழ்ச்சி மூலமாக நாம் அறிமுகப்படுத்தினோம். அதனால் நமக்கு கிடைத்த பாராட்டு என்பது நமது அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே சொந்தமானது.

அத்தகைய பெருமையை தேடி தந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று நான் அறிவித்தேன். 15 விளையாட்டுகள் பள்ளி – கல்லூரி – பொதுப்பிரிவு – அரசு ஊழியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் என்று நான் அறிவிப்பு செய்தேன். அந்த அறிவிப்பை மிக வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த மே 8 ஆம் நாள் முதலமைச்சர் கோப்பை காண சின்னத்தையும் – அதற்கான பாடலையும் நான் வெளியிட்டேன். ஜூன் 30-ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த போட்டிகள் இன்று நிறைவு விழா காண்கிறது. உதயநிதி அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை ஒரு புத்துணர்ச்சியை பெற்று இருக்கின்றது.நான் 2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றபோது பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டது இதே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தான்.