ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் தங்களை குழந்தைகளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். இந்நிலையில் ரோட்டில் சுற்றி திரிந்த குதிரை திடீரென பக்தர்களின் கூட்டத்திற்குள் நுழைந்தது.

இதனால் குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக கோவில் பணியாளர்கள் குதிரையை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.