ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் இருக்கும் காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த இறைச்சி கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கடையிலிருந்த மேஜை, இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.