திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சண்முகவேல்(17) கடந்த மாதம் 20-ஆம் தேதி அடிவாரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அண்ணன், தம்பியான அரவிந்த்(25), சந்துரு(23) உள்ளிட்ட மூன்று பேர் சண்முகவேலிடம் தகராறு செய்தனர்.

பின்னர் மூன்று பேரும் இணைந்து சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த செல்வன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அரவிந்த், சந்துரு, சபரிநாதன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.