தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.