தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர் கோவில்பட்டி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டில் இரவு நேரத்தில் தனியாக கொண்டிருந்த இந்திராணி கழுத்தில் ரத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இந்திராணியின் சடலத்தை மீட்டு பிரேத சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் ஏப்ரல் 30-ம் தேதி நடந்த நிலையில் ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்திராணியை கொலை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரை போலீசார் பதிவுகள் செய்துள்ளனர். ராமசாமி இந்திராணியின் வீட்டிலிருந்த 11 பவுன் நகைகளை கொள்ளை அடித்ததோடு 20,000 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.