தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கு செட்டிப்பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் இருக்கிறது. நேற்று மதியம் பைசுஅள்ளி ஏரிக்கரை ரோட்டில் இருக்கும் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஒரு ஆண், பெண் மயில்கள் அமர்ந்திருந்தது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் பெண் மயில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது. ஆண் மயில் கம்பத்தில் தொங்கியபடி உடல் கருகி இறந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து இரண்டு மயில்களின் உடல்களையும் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.