ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் வெளியேறியது. இந்த காட்டு யானைகள் நேற்று மாலை வரட்டுபள்ளம் அனை அருகே இருக்கும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டனர்.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சுமார் 1/3 மணி நேரம் அங்கும் இங்கும் உலா வந்த யானைகள் சிறிது நேரம் கழித்து காட்டுப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.