கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கனகமுட்லு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஆனந்தி அப்பகுதியில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.