திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில் கோவிலுக்கு வந்த சில பக்தர்கள் விடாத மழையில் நனைந்தபடி மேளம் அடித்தும், ஆடிபாடியும் முருகன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.