கோவையில் இதய செயலிழப்புடன் போராடிக்கொண்டிருந்த ரகுமானின் உயிர், ஈரோட்டைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த மஞ்சுளாவின் தன்னலமற்ற பெருந்தன்மையால் காப்பாற்றப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் நோயாளிகளின் தரவை திறம்பட நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசின் புதுமையான விடியல்  செயலியால் தான்  இந்த உயிர் காக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை நிஜமானது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

உடல் உறுப்பு தானம் வழங்கும் நன்கொடையாளர்கள் மற்றும் அதை பெறுவோரை  இணைப்பதில் இந்த செயலி ஓர் அற்புத பாலமாக செயல்பட்டு வருகிறது, இது தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும.  மஞ்சுளாவின் கருணைச் செயல், உடல் உறுப்பு தானத்தின் ஆற்றலுக்கும், சுகாதாரப் பாதுகாப்பில் அதிநவீன தொழில்நுட்பத்தின் நேர்மறையான தாக்கத்துக்கும் சான்றாகத் தொடர்ந்து எதிரொலிக்கும், விடியல் செயலி எதிர்காலத்தில் இன்னும் பல உயிர்களைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.