கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்தும் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்தும் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு வாராந்தோறும் சனிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மே மாதத்தோடு முடிவடையும் நிலையில் தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 3-ஆம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 3-ம் தேதி முதல் ஜூலை 24-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.