தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்று உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து பேசினார்.

அவரை சென்னையில் 2024-ம் ஆண்டு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அப்போது அமைச்சர் சண்முகம் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை இயக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் அதற்கு இது குறித்து ஒன்றிய அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.