திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி-மலர் தம்பதியர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அம்பத்தூர் அருகே பருத்திப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு 15 வயதில் லோக்நாத் என்ற மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் லோக்நாத் கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வமாக இருந்துள்ளார். அவரிடம் பெற்றோர் 6 வயது சிறுமியை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது நண்பர்கள் வந்து லோக்நாத்தை கால்பந்து விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இதனால் தன் தங்கையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் விளையாட சென்று விட்டான். அப்போது வீட்டிற்கு வந்த பெற்றோர் குழந்தை மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து லோகநாத்தை கண்டித்துள்ளனர். இதனால் லோக்நாத் 14-வது மாடிக்கு லிப்டில் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.