சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்போது கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வண்டலூர் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை விலங்குகளின் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.

ஆனால் தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் மே மாதம் மட்டும் அனைத்து நாட்களும் உயிரியல் பூங்கா விடுமுறை இன்றி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விலங்குகளின் சூட்டை தணிப்பதற்காக விலங்குகளின் மீது அடிக்கடி தண்ணீர் பீய்ச்சப்படும். இதேபோன்று பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே குடிநீர் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றி பார்ப்பதற்கு பெரியவர்களிடம் 90 ரூபாயும் சிறியவர்களிடம் 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.