சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வு சோதனையின்போது, மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாக கூறி உள்ளாடையை அலுவலர்கள் அகற்றச் சொல்லி இருக்கிறார்கள். வேறு வழியின்றி உள்ளாடையை அகற்றிய பிறகுதான், அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளனர்.