நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் ?  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புல இன்டர்வியூ  வருவ. நாங்க நேர்காணல் எடுக்கும்போது,  அரசு பள்ளியில் படித்திருக்கிறாயா என்று பார்ப்போம். அரசு கல்லூரியில் படித்திருக்கிறாயா என்று பார்ப்போம்.  உனக்கு வேலையில முன்னுரிமை கொடுப்போம். உனக்கு கொடுத்துட்டு மிச்சம் இருந்தால் ? தனியார் பள்ளி – கல்லூரிகளில் படிச்சவனுக்கு கொடுப்போம்.

இல்லனா… கிளம்புபா என சொல்லிடுவோம். அப்புறம் பார்ப்பேன்…  பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் இருக்கன்னு  பார்ப்பேன், அதுக்கு வேலையில் முன்னுரிமை. தினேஷ், விக்னேஷ், சுரேஷ், ரமேஷ், என்று பாம்பு மூச்சுவிட்ட மாதிரி  புஸ்சு புஸ்சுன்னு வச்சி இருந்தன்னு, வச்சுக்கோ….  வேலை வேணுமா ?  முதல்ல போய் 50 ரூபாய்… விலையை குறைச்சிடுவோம்…ஒரு பத்து ரூபாய் கட்டி பெயரை மாத்திட்டு வா… ஒரு நல்ல தமிழ் பெயர் வச்சிட்டு வா, போ…   தாய் மொழியில் பெயரை கூட தாங்காத ஒரு இனம் எப்படி வாழும் ?

ரொம்ப பேசினா…  இந்த சிவாஜி படத்துல வரும் இல்ல.  ஆபீஸ் ரூமுக்குள்ள போங்க. ஆபீஸ்ல ரூம்குள்ள  போக விட்டு அங்க ஜிம் பாய்ஸ் இருப்பாங்க. அப்படி குருக்கு மருக்குமா நடந்து கொண்டே இருப்பானுங்க. நாம் இங்கிருந்து ஒரு பச்சை மட்டை…  ஆள பிடிச்சுக்கடா,  நீ தான மண்ணை அள்ளி வித்தவன்…

எவ்வளவுக்கு வித்த… பத்தாயிரம் கோடி தந்துவிடுகின்றேன் என் மண்ண திருப்பி தந்துருவியா ? நீதானடா மலையை எம்சன்ட் போட்டவன், நீதானடா…  குவாரி – கல்குவாரி ஓனர் நீதானே..இங்க வாடா…. இங்க வாடா…  இங்க வாடா எத்தனை கோடிக்கு வித்த… ஐந்தாயிரம் கோடிக்கு வித்தியா ? ஐந்தாயிரம் கோடி கொடுத்துறுதேன் என் மலையை வளர்த்து காட்டுடா…

போட்டு பிச்சி, முதுகுல…. ரொம்ப சேட்டை செய்யும் போது எங்க ஆளு என்ன பண்ணுவாரு  தெரியுமா ?  பச்சை மட்டை வைத்தியம் எனக்கு எங்க தெரியும் ?  நாட்டுல தான்… இவனுக்கெல்லாம் பச்சை மட்டை வைத்தியம் தான் சரியா இருக்கும்னா….என்னடா பச்சை மட்டை வைத்தியம் என கேட்டேன்…. அண்ணே… சட்டையை கழத்திட்டு, பச்சை மட்டையை வச்சி அடிச்சோம்ன்னா…. தோலு பிரிச்சிரும். பிரிஞ்சு உடனே என்ன பண்ணனும்ன்னு கேட்டேன். கடல் நீரை அள்ளி முதுகுல உத்திட்டோம்னா… அவன் ஒரு நிலைமைக்கு வருவான் பாரு என தெரிவித்தார்.