தமிழக முதலமைச்சர் C. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கி வரும் நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த திறனாய்வுத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

முதல்வரின் கனிவான மற்றும் முதிர்ச்சியான தலைமை, கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதைத் தடை செய்த தைரியமான முடிவு ஆகியவை பாராட்டப்பட்டுள்ளன. மேலும், அனுபவமிக்க கே.ஏ. செங்கோட்டையன், வைகை அணை தூர்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்திய சி.டி.ஆர். நிர்மல் குமார், அறிக்கைகளால் பக்குவமடைந்துள்ள ராஜ் மோகன் மற்றும் தொழிற்துறையில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தனா ஆகியோர் நல்ல முறையில் செயல்படும் அமைச்சர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நிதித்துறை அமைச்சர் மேரி வில்சனின் செயல்பாடு பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியதும், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வாநாதன் மீது அத்துமீறல் புகார்கள் எழுந்ததும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நெறிமுறையற்ற புகார்களில் சிக்கிய ஜெகதீஸ்வேரி மற்றும் பேருந்து தாமதம் குறித்துப் பொறுப்பற்ற முறையில் பதிலளித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் ரகசிய மதிப்பீடு ஒன்றை நடத்தியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் மோசமான செயல்திறன் கொண்ட அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“>

 

விரைவில் முதலமைச்சர் விஜயின் 100 நாள் சாதனை குறித்த முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.