பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பே.கீரனூரில் மணி(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு மணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போக்சோ சட்டத்தின் கீழ் மணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் மணிக்கு 20 ஆண்டுகள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.