ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பாளையத்தில் சென்னி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா(21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பின்னர் காதல் ஜோடியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.