பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நீக்ரோஸ் ஓரியண்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் கவர்னராக ராயல் டெகாமோ என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகருக்கு சென்றார். அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து பேசி அவர்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் ராணுவ உடையில் வந்து தங்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் கவர்னர் ராயல் டெகாமோ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார். மேலும் பொது மக்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.