மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது “அதிகாலை 5.30 மணிக்கு யாங்கூன் நெடுஞ்சாலையில் மைல்கல் 167 க்கு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்துள்ளது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் ஒரு குழந்தை மட்டும் ஆபத்தான நிலையில் உள்ளது” என அவர்கள் கூறியுள்ளனர்.