நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் தற்போது 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதாவது சீமான் தலைமையிலான கூட்டணிக்கு தற்போது யாரும் முன் வர மாட்டார்கள் என்பதால் தனித்து தைரியமாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் பாத்திமா, வடசென்னையில் இளவஞ்சி, தென் சென்னையில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுவார்கள் என முதல் கட்டமாக அறிவித்துள்ளார். மேலும் தனித்தே தைரியமாக களத்தில் இறங்குவதாகவும் சீமான் கூறியுள்ளார்.