தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் மார்ச் 27-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.