திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது. தற்போது பசு மாடும், கன்று குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறது. பொதுவாக பசுமாடு ஒரு கன்று தான் ஈனும். ஆனால் இந்த பசு மாடு மூன்று கன்று குட்டிகளை ஈன்றதால் அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.