பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையம் பள்ளிக்கூட தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கவுல்பாளையம்- செங்குணம் பிரிவு ரோடு ராஜீவ் காந்தி சிலை அருகே மனோகரன் என்பவருக்கும், பாலமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த சுரேஷ் தகராறை விலக்கிவிட்டார். இதில் கோபமடைந்த மனோகரன் சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.

மேலும் அவரது இடது காதின் மேற்பகுதியை கடித்து துப்பினார். இதனையடுத்து கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு மனோகரன் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மனோகரனை கைது செய்தனர்.