நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து சிறுத்தையின் உடலை அங்கேயே புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடந்தது 5 மாதமே ஆன ஆண் சிறுத்தை குட்டி. சிறுத்தை குட்டி எப்படி இருந்தது என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.