கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் வருகிற 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 3 மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு செய்யப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.