கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாடூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது சேலம் நோக்கி வேகமாக சென்ற லாரி செல்வன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.