ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓடக்காட்டில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று காலை சித்தோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ராஜ்குமார் என்பவர் டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் ராஜ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த நபர் கட்டையால் ராஜகுமாரின் தலையில் பலமாக தாக்கினார்.

இதனால் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.