தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வபோது தண்ணீர் மற்றும் உணவை தேடி கிராமங்களுக்குள் நுழையும். நேற்று அத்திமுட்லு மாரியம்மன் கோவில் பின்புறம் புள்ளிமான் ஒன்று சுற்றி திரிந்தது.

அப்போது நாய்கள் விரட்டி கடித்ததால் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது நாய்கள் கடித்து கொன்றது 5 வயதுடைய புள்ளிமான் என்பது தெரியவந்தது. பின்னர் மானின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு அந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.