தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மஅள்ளி பகுதியில் சட்டவிரதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் சுருளிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பதும், அவர் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பூபதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.