கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இன்னலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பள்ளியில் ஆய்வு செய்தார். அவர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை தூய்மையாக பராமரிப்பது ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து அமைச்சர் அந்த பள்ளியில் இருக்கும் நூற்றாண்டு அரங்கம் மற்றும் மைதானத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.