திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஒருவர் மது குடித்துவிட்டு போதையில் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் ரகளை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் ஓடி தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குடிபோதையில் ரகளை செய்த அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.