ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனச்சரங்கங்களுக்கும் உட்பட்ட பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் பாலப்படுகை என்ற இடத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் வனத்துறையினர் நடந்து சென்று தீயை அணைத்தனர்.

ஆனாலும் பல ஏக்கர் பரப்பளவில் இருக்கும் மரம், செடி கொடிகள் எரிந்து நாசமானது. நேற்று தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்டாபுரம் பகுதியில் காட்டு தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த தீயை அணைக்க வனத்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர்.