நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சங்கர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெற்றி விகாஸ் பள்ளி, எஸ்.பி.கே பள்ளி கொங்குநாடு பள்ளி, ஸ்பெக்டக்ரம் அகாடமி உட்பட பத்து அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா இந்த விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் நாமக்கல் மாவட்ட கூடை பந்து கழகத்தின் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிலம்பம், நீச்சல், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளும் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.