தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் இனிப்புகள் தரமானதாக இருக்கிறதா எனவும், அதன் தயாரிப்பு காலாவதியாகும் தேதிகள் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வழங்கியுள்ளனர். சரியான நடைமுறையை ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.