தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர் பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு அண்ணாதுரை தனது மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டில் இருந்து ஓட்டி சென்றார்.சிறிது தூரம் சென்றதும் மாடு மிரண்டு ஓடியது. இதனால் அண்ணாதுரை மாட்டை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து ஓடினார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக அண்ணாதுரை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதனால் படுகாயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அண்ணாதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.