தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகாடு என்ற கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி தான் அழகு ராணி. 35 வயதாகும் இவர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று அவரை கடித்த நிலையில் கூச்சலிட்டார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த சரவணன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அழகு ராணி பிளாஸ்டிக் பை ஒன்றில் அந்த பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார்.

கையில் பாம்புடன் வந்த பெண்ணை பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள் பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டனர். தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.