சனாதனம் குறித்து பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் மற்றும் சாமியார் பேசிய ஆடியோவை வெளியிட்ட பியாஸ் ராய் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி கொடுத்த புகாரில், மதுரை சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.