புதுச்சேரி திமுக சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “மோடி, அமித்ஷா மற்றும் பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்களைவிட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான், அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார்.

இல்லையெனில் வேறு வேலைக்கு சென்று இருப்பார். தமிழிசை ஆளுநர் ஆனது, அண்ணாமலை ஆடு மேய்க்காமல் ஐ.பி.எஸ் படித்தது எல்லாம் இதனால் தான். நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வளர்ந்துவிட்டு, சனாதனம், சனாதனம் என்று சொல்கிறீர்கள்” என அவர் பேசினார்.