தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில்  ரேஷன் கடைகளில் தற்போது புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

அதோடு சர்க்கரை, மண்ணெண்ணெய், பாம் ஆயில் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நுகர்வோருக்கு மாதம் ஒரு லிட்டர் பாமாயிலை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.