நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகித உயர்வை நிறுத்தி வைக்கும் என்று SBI தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடின்றி உயர்ந்த பணவீக்கத்தால் ரிசர்வ் வங்கியும் ரெபோ வட்டி விகிதத்தை 6.5% வரை உயர்த்தியிருக்கிறார்கள். இது லோன் வாங்கியோருக்கு இடியாக வந்திறங்கிய நிலையில் பணவீக்கம் குறைவது ஆறுதல் அளிக்கிறது.