தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பன்கொட்டாய் கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலகத்திற்குள் சென்று திரும்பி வந்த அரவிந்த் மோட்டார் சைக்கிளின் இன்ஜின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் இருக்கைக்கு அடியில் பாம்பு சென்றது. இதனால் இருக்கையை கழற்றி 2 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.