தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் காமராஜர் காலனியில் ஞானசந்தரம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞானசுந்தரம் காட்டுகுறிச்சி செல்லும் வழியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஞானசுந்தரம் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதுகுறித்து ஞானசுந்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் எனது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.