கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் அம்பேத்கர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாலமுருகனின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அருகில் இருந்த மரகதம் என்பவர் குடிசை வீட்டுக்கும் தீ வேகமாக பரவியது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு குடிசை வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.