தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் சேர்ந்து மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு முதல் அனைத்து கல்வி தகுதி கொண்டவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தையல் பயிற்சி உள்ளிட்ட கைத்தொழில் தெரிந்தவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் எனவும் முகாமிற்கு வரும்போது தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் கல்வி சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.