ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தனியார் பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருக்கும் குடோனில் பழுதடைந்த ஊர்திரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.